முழுமைத் திட்டம்
முழுமைத் திட்டம் என்றால் என்ன?
தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம், 1971, தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டைத் திட்டமிடுவதற்கு வகை செய்யும் ஒரு சட்டம், முழுமைத் திட்டம் பின்வரும் ஏதேனும் அல்லது அனைத்து விஷயங்களுக்கும் வழிவகுக்கும் என்று கூறுகிறது:
(a). திட்டப்பகுதியில் நிலம் எந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது;
(b). குடியிருப்பு, வணிக, தொழில் மற்றும் வேளாண்மை நோக்கங்களுக்காகவும் பூங்காக்கள் விளையாட்டுத் திடல்கள் திறந்த வெளிகளுக்காக நிலத்தை ஒதுக்குதல்; அல்லது ஒதுக்கி வைத்தல்;
(c). பொதுக் கட்டடங்கள், பொது நிறுவனங்கள், பொது வசதிகளுக்காக நிலத்தை ஒதுக்குதல் அல்லது ஒதுக்கி வைத்தல்;
(d). தேசீய நெடுஞ்சாலைகள், முதன்மைச் சாலைகள், எல்லைப்புற வட்டவடிவச் சாலைகள் (Ring Roads) பெரிய தெருக்கள், இருப்புப்பாதைகள், விமானதளங்கள், கால்வாய்கள் உட்பட போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு வகை செய்தல்;
(e). போக்குவரத்தும், சரக்குப் போக்குவரத்து முறையும் போக்குவரத்துச் சுற்றோட்ட முறையும்;
(f). பெரிய சாலை-தெருக்களுக்கு மேம்பாடுகள் செய்தல்;
(g). வருங்கால மேம்பாடு விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்காகவும், புது வீடுகளை கட்டுவதற்காகவும் பகுதிகளை ஒதுக்குதல்;
(h). சீர்கேடான வடிவமைப்புப் பகுதிகள் அல்லது வளர்ச்சியற்ற பகுதிகள், குடிசைப்பகுதிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகவும் மக்கள் உறைவிடத்தை மாற்றி அப்பகுதியை மேம்படுத்துவதற்காகவும் வகை செய்தல்;
(i). வசதிகள், பணிகள், பயன்கள்;
(j). வீட்டுவசதி, கடைவசதி, தொழில்வசதி, பொதுவசதிகள், கல்வி-கலாச்சார வசதிகள் ஆகியவற்றுக்கென குறிப்பிடப்பட்ட பகுதிகளின் விரிவான மேம்பாட்டுக்கு வகை செய்தல்;
(k). கட்டடக்கலைக் கூறுகள், கட்டடங்கள், கட்டுமானங்களின் உயரம், முகப்பு ஆகியவற்றை நெறிப்படுத்துதல்;
(l). கட்டடங்கள் மற்றும் பிற கட்டுமானங்கள் அமைந்துள்ள இடம், மண்டலம், அவற்றின் உயரம், மாடிகளின் எண்ணிக்கை, அளவு, முற்றங்கள் மற்றும் திறந்த வெளிகளின் அளவு கட்டிடங்கள், கட்டுமானங்கள், நிலத்தின் பயன் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்கு வகை செய்தல்;
(m). முழுமைத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய நிலைகள்;
URDPFI 2015 வழிகாட்டுதல் பெருந்திட்டத்தை (மேம்பாட்டுத் திட்டம்) பின்வருமாறு விவரிக்கிறது:
• இந்தத் திட்டங்களின் காலக்கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு கொள்கைகளுக்கான உத்திகள் மற்றும் உட்கட்டமைப்பு உத்தேசங்கள் வடிவில் மேலும் தேவையான விவரங்கள் மற்றும் நோக்கம் கொண்ட செயல்களை வழங்குவதே வளர்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். 5 வருட கால கட்டங்களில், அவ்வப்போது மறு ஆய்வு செய்தல்.
• இவை தவிர, சுற்றுச்சூழல் மதிப்பு, இயற்கைக் காட்சிகள் மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வரலாற்று, கட்டிடக்கலை மற்றும் அறிவியல் ஆர்வமுள்ள இடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பு கொண்ட அம்சங்கள், கட்டமைப்புகள் அல்லது இடங்களைப் பாதுகாக்கவும் முழுமைத்திட்டம் பயன்படுகிறது.
இது எதற்கு வழிவகுக்கிறது?
மற்ற இடங்களைப் போலவே தமிழகத்திலும் நகர்ப்புறங்கள் கடந்த பத்தாண்டுகளில் அளவிலும் சிக்கலான தன்மையில் வளர்ந்து எளிதில் நிர்வகிக்க முடியாதவையாக மாறிவிட்டன. நகர்ப்புறங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் திட்டமிட ஒரு வழிமுறை அல்லது முன்னோக்கிய வழியின் தேவை மிகவும் அவசியமாகிவிட்டது. முன்னெப்போதையும் விட இப்போது சுற்றுச்சூழலில் வளர்ச்சியின் தாக்கம் கவனமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். நகர் ஊரமைப்புச் சட்டம், 1971, நகர்ப்புறங்களுக்கான முழுமைத் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தவும், நகர்ப்புறங்களில் நிலைமையை மேம்படுத்தவும், பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இடமாக மாற்றவும் வழிவகை செய்கிறது